Sunday, March 28, 2010

வவுனியாவில் ஈபிடிபி யினர் தாக்கி இளைஞர் மரணம்.

வவுனியா வைரவப்புளியங்குளம் பிரதேசத்தில் ஈபிடிபி உறுப்பினர்களின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு ஜூட் , துன்பம் உட்பட 6 க்கு மேற்பட்ட ஈபிடிபி உறுப்பினர்கள் குறிப்பிட்ட இளைஞனின் வீட்டிற்கு சென்று பொல்லுகள் தடிகளால் அவரை பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இளைஞனை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சகை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிருஸ்ணா எனப்படும் தங்கராஜா கிருஸ்ணகோபல் என இனம்காணப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் , அவர்களில் கடந்த வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான தேர்தலில் ஈபிடிபி சார்பாக போட்டியிட்ட ஜெயராஜ் எனப்படும் குருவும் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com