Tuesday, March 9, 2010

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தின் ஐ.நா விற்கு இடமில்லை. பிரதமர்

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நமது நாடு சிறிய நாடு என்பது உண்மை. எங்களிடம் போதியளவு ஆயுதபலம் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அதையே காரணமாக வைத்துக்கொண்டு எங்களை அதிகாரம் செய்ய முயற்சிப்பார்களானால் அது தவறானதாகும்.

ஈராக்,பிரிட்டன் ஆகிய நாடுகளில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுகின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு ஏன் அந்த நாடுகளில் தலையிட முடியாது? மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய அந்த நாடுகளில் மாத்திரம் ஏன் குழுக்களை நியமிக்க முடியாது?

நாம் இதனை தெளிவாக சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com