Monday, March 1, 2010

முன்னாள் பா.உ களுக்கான பாதுகாப்பு : நீதிமன்று சட்ட மா அதிபருக்கு ஆலோசனை.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்த்து எதிர்கட்சி பாராளுன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து 17 முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள், பாராளுன்றம் கலைக்கப்பட்டிருந்தாலும் , முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்களுக்கான உயிரச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணமே உள்ளதாகவும் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் வாதாடினர்.

மேற்படி வாதத்தினை கருத்திலெடுத்த நீதிபதிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சந்தர்பங்களை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com