Wednesday, February 10, 2010

பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை. சி.பி.ஐ. இயக்குனர்.

விடுதலைப்போராட்டம் எனும் பெயரால் ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிக்கு காரணமாக இருந்தவரும், இறுதிகட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடந்த பின்னர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்ற பிரபாகரனது மரணச்சான்றிதழ் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சி.பி.ஐ இயக்குனர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவழக்கில் வே.பிரபாகரன் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய அரசு, அவர் மீதான வழக்கை முடிக்க வேண்டும். எனவே, அவரது மரண சான்றிதழை தாருங்கள் என்று சிறீலங்காவிடம் கேட்டு வருகிறது.

இறப்புச் சான்றிதழ் இதுவரை சிபிஐக்கு கிடைக்கவில்லை என்று மிஸ்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டி அளித்தபோது, வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு அனுப்பி விட்டதாக கூறினார்.

இந்நிலையில், வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு தரவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com