Saturday, February 20, 2010

ஐக்கிய தேசியக் கட்சியில் பல புதிய முகங்கள் தேர்தலில்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல புதிய முகங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளது. வேட்பாளர் தெரிவுகள் 80 சதவீதம் வரை முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கக்கூடிய பல புதிய முகங்கள் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் நாளை முதல் உத்தியோக பூர்வமாக கையொப்பம் இடப்படும் என தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் 25, 26 ம் திகதிகளில் வேட்பு மனுக்கள் பாரமளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது கூட்டணியுடன் இணைந்து போட்டியிட விரும்புபவர்களுக்காக கதவுகள் தொடர்ந்தும் திறந்தே உள்ளதாக தெரிவத்துள்ள அவர் குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டில் இணைந்திருந்த ஜேவிபி யினருக்கும் அது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com