Sunday, February 7, 2010

நடுவானில் விமானங்கள் மோதல் அமெரிக்காவில் மூன்று பேர் பலி

நியூயார்க்:அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாயினர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பவுல்டர் விமான நிலையத்திலிருந்து ஒரு இருக்கை கொண்ட விமானம், மூன்று பயணிகளை கொண்ட கிளைடர் விமானத்தை இழுத்து கொண்டு நேற்று முன்தினம் பறந்தது.

பவுல்டர் நகரத்தின் வடக்கு பகுதியில் இந்த விமானங்கள் சென்று கொண்டிருந்த போது, நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் திடீரென வந்து ஒரு இருக்கை கொண்ட விமானத்தின் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஒரு இருக்கை மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட விமானங்கள் வெடித்து சிதறின.இந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். கிளைடர் விமானத்தில் இருந்த பைலட்டும், ஒரு பெண் பயணியும் அவரது குழந்தையும் பாரசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கி விட்டனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com