Friday, February 26, 2010

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனோமா பொன்சேகா தலமை தாங்குகின்றார்.

ஜெனரல் பொன்சேகாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய கூட்டமைப்பிற்கான தேர்தல் பிரச்சராங்கள் இராணுவப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி அனோமா பொன்சேகா தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அக் கூட்டணியின் பொதுச் செயலாளரும், ஜேவிபி யின் பிரச்சாரச் செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்கள் எதிர்வரும் மார்ச் 1ம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் இலங்கையில் உள்ள பிரதான நகரங்கள் யாவற்றிலும் தமது பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் எனவும் அவற்றில் பெரும்பாலான கூட்டங்களில் ஜெனரல் பொன்சேகா சார்பாக அவரது பாரியார் உரையாற்றுவார் எனவும் விஜித கேரத் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com