Friday, February 26, 2010

பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. விசேட கொமாண்டோ பயிற்சி பெற்ற 40 இராணுவ வீரர்கள் இவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருந்தனர். இப்பாதுகாப்பு எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமால் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு புலிகளினால் அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையிலேயே பாதுகாப்பு நீக்கப்படுவதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கிலங்கையில் புலிகளின் செயற்பாடு முற்றாக ஓழிக்கப்பட்டுள்ளது என பிள்ளையான் பல தடவைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை பாரமளித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவரது பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

வேட்பாளர்கள் விபரம்.

1 அருணாசலம் செல்வேந்திரன் (தலைமை வேட்பாளர்)
2 தம்பராசா பேரின்பராசா.
3 திருமதி தயாழினி திரவியம்.
4 இரத்தினசிங்கம் மகேந்திரன்.
5 அழகரெத்தினம் பாலகிருஸ்ணன்.
6 தம்பிராஜா ஈஸ்வரராஜா.
7 கணபதிப்பிள்ளை மோகன்.
8 அ. ராஜவரோதய மணிவண்ணன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com