Monday, February 22, 2010

மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க மற்றும் உயர்மட்ட தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினருக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியலில் 2 இடங்கள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அவ்விருவரில் ஒருவர் மனோகணேசனின் சகோதரர் பிரபா கணேசன் என தெரியவருகின்றது.

அதே நேரம் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக மேலும் இரு தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் 4 தமிழர்கள் போட்டியிடவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com