Wednesday, February 24, 2010

ஜெனரல் பொன்சேகா வேட்பாளர் மனுவில் கையொப்பமிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்காக ஜெனரல் பொன்சேகா வேட்பாளர் மனுவில் கையொப்பம் இட்டுள்ளதாக ஜேவிவியின் முக்கியஸ்தர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 1:30 மணியளவில் ஜெனரல் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தளத்திற்குச் சென்ற சட்டத்தரணி சுனில் வத்தளை அவரிடம் வேட்பு மனுவில் கையொப்பம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவின் நிலைமைகளை அவதானிக்க சர்வதேச குழுக்கள் வருகை.


ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை இலங்கை அனுப்புமாறு அனோமா பொன்சேகா அவ்வமைப்புக்களை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்ததாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com