Thursday, February 25, 2010

பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மேலும் தொகுதியினர் விடுதலை.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து சில தினங்களில் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவிலியன்களில் மேலும் 8 பேரை இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்று விடுதலை செய்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த அவர்களை இன்று நீதிமன்றில் சீஐடியின் ஆஜர் செய்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சீஐடி யினர் மன்றிற்கு சமர்பிக்க தவறியதை அடுத்து நீதிவான் குற்றவாழிகளை விடுதலை செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com