Thursday, February 18, 2010

பாதுகாப்புக் கோரி நீதிமன்று செல்லத் திட்டமிடும் ஐ.தே.க.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது பாதுகாப்புக்கள் அரசாங்கத்தால் குறைக்கப்பட்டும் , நீக்கப்பட்டும் உள்ளமையை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்று செல்ல திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமையால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் அரச ஆதரவு ஆயுதக்குழுக்களால் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அரச தரப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com