Monday, February 1, 2010

மெக்சிகோவில் 13 மாணவர்கள் சுட்டுக்கொலை.

மெக்சிகோ நாட்டில் உள்ள கைடட் ஜாரஸ் நகரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அங்கு புகுந்த மர்ம மனிதர்கள் 15 பேர் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 13 மாணவர்கள் அவ்விடத்திலேயே பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதலை நடாத்தவந்தவர்கள் 7 கார்களில் இன்று அதிகாலை 12.40 மணியளவில் திடீரென வந்திறங்கி ஏகே 47 துப்பாக்கிகள் மூலம் சுட்டுத்தள்ளியுள்ளனர். அவ்விடத்திலிருந்து சுமார் 100 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்தபோது மாணவர்கள் உதைபந்தாட்ட போட்டியொன்றை தொலைக்காட்சியில் பார்வையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். தாக்குதல்தாரிகள் அவ்விடத்திற்கான பாதைகள் யாவற்றையும் வீதித்தடைபோட்டு தடுத்துவிட்டே அங்கு சென்றுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com