Sunday, January 24, 2010

இந்தியத் தூதரகத்தின் கிளை ஒன்று யாழிலும்.

புலிகளியக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதான செய்தி வெளியாகி சில நாட்களில் இந்திய அரசு அதன் இலங்கைக்கான தூதரகத்தின் கிளை ஒன்றை யாழ்பாணத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தியோக பூர்வ வேண்டுகோள் டெல்லியில் இருந்து இலங்கை அரசிற்கு விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அதற்கான பதிலினை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை எனத் தெரியவருகின்றது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அரசு வடகிழக்கு மாகாணங்களின் மீழ் கட்டுமானத்திற்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மிதி வெடிகளை மீட்கும் பணியில் 7 இந்திய நிறுவனங்கள் இலங்கையின் வடக்கே பணிபுரிகின்றது. அத்துடன் பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. இவ்வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்குடனேயே யாழில் தூதரகத்தின் கிளை ஒன்று நிறுவப்படவுள்ளதாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இலங்கை அரசிடமிருந்த மிகவிரைவில் சாதகமான பதில் வெளிவரும் என இந்திய தூதரகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com