Friday, January 29, 2010

வன்செயல்களால் அனுராதபுரத்தில் பதட்டநிலை தொடர்கின்றது. .

தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரச ஆதரவாளர்களால் நாடு பூராக எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீது வன்செயல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. அனுராதபுர மாவட்டத்தில் தம்புட்டுக்கம, ராஜங்கணய பிரதேசங்களில் எதிர்கட்சி ஆதரவாளர்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் பல தேசமாக்கப்பட்டும் , தீவைக்கப்பட்டும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மையத்தின் அதிகாரி கீர்த்தி தென்னக்கோன், கடந்த 48 மணிநேரத்தில் நாடுபூராகவும் 50 - 75 வன்செயல்கள் தொடர்பான செய்திகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்:

கலவௌ பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் சுனில் மென்டிஸ், தனது பிரதேச சபைக்குட்பட்ட தமது ஆதரவாளர்களது 30 கடைகளும் வீடுகளும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பீதி காரணமாக ஊர்களை விட்டு ஓடி வெளியிடங்களில் வாழும் நண்பர்கள் , உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி குற்றச்சாட்டுக்களை தேர்தல் விடயங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண நிராகரித்துள்ளதுடன் , ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com