Saturday, January 30, 2010

பொன்சேகாவிற்கு பாதுகாப்பளிக்க அமெரிக்கா வலியறுத்தல்!

''பொன்சேகாவிற்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது.

ராஜபக்சவை குடும்பத்துடன் கொலை செய்ய சதிதிட்டம் தீட்டினார் என்று குற்றம் சாட்டியள்ள இலங்கை அரசு சரத்பொன்சேகாவின் பாஸ்போட்டை முடக்கியுள்ளது. தன்னை கைதுசெய்து சிறையில் அடைக்கவே ராஜபக்ச அரசு இந்த பொய் குற்றச்சாட்டை சுமத்தி பாஸ்போட்டை முடக்கியுள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையிலிருந்த தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் அடைய சரத்பொன்சேகா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இலங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கேட்க சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசுக்கு எழுதியுள்ள கடித்தில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து கவலை அடைந்துள்ளோம். எனவே சரத் பொன்சேகாவை தகுந்த பாதுகாப்புடனும், மரியாதையுடனும் இலங்கை அரசு நடத்த வேண்டும்."என்றுவலியுறுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் தூதர் சரத் பொன்சேகாவை தொடர்பு கொண்டு அமெரிக்காவின் குடிபெயர்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com