Tuesday, January 12, 2010

தங்காலையில் பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் : பெண் பலி, 10 பேர் காயம்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா சார்பாக திஸ்ஸமகராம பகுதியில் இடம்பெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றிற்கு சென்று கொண்டிருந்த பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கி பிரயோகத்தில் 1 பெண் பலியாகியுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்திற்கு தங்காலை பிரதேச சபைக்கு உட்பட்ட துலானை பிரதேசத்தில் இருந்து சென்று கொண்டிருந்த, சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றது. மரணமடைந்துள்ள பெண் 58 வயதுடைய குசுமாவதி குறுப்பு ஆராச்சி என தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவத்திற்கான பின்னணி என்னவென இதுவரை தெரியவரவில்லை எனவும் கூறியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com