Sunday, January 24, 2010

10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 84 வயது மூதாட்டி

ஹெய்ட்டியை நிலநடுக்கம் உலுக்கிய பத்து நாட்களுக்குப் பிறகு 84 வயதான மூதாட்டி ஒருவரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். அந்த மூதாட்டியின் உடம்பெல்லாம் காயங்கள். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 22 வயது இளைஞர் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இஸ்ரேலிய மீட்புக் குழுவினர், அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளனர். அந்த இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

ஹெய்ட்டியை கடந்த 14-ம் தேதி உலுக்கிய நிலநடுக்கத்தில் 110,000 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் காயமடைந்த ஏராளமானோர் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் வீடுகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் தங்க இடமில்லாமலும் உணவு, தண்ணீர் கிடைக்காமலும் சிரமப்படுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com