Friday, December 11, 2009

மக்கள் விடுதலை இராணுவம் ஜெனரல் பொன்சேகாவை கொல்லத்திட்டம் மனோகணேசன்.

புலிகள் நியாயமற்ற பயங்கரவாதிகள் என்கின்றார் மனோகணேசன்.
கிழக்கு பிரதேசத்தில் இயங்குவதாக தெரியப்படுத்தப்பட்டுள்ள மக்கள் விடுலை இராணுவம் எனும் அமைப்பினால் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வமைப்பு அரச அனுசரணையிலேயே இயங்குவதாக பல சந்தேகங்கள் நிலவுவதாக தெரிவித்துள்ள அவர், இச்சந்தேகமானது உயிர் அச்சுறுத்தல் உள்ள அனைவரதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதன் பொருட்டு பாதுகாப்பை அதிகரிக்குமாறு பலர் வேண்டுதல் விடுத்துள்ளபோது அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மிகவும் கொடிய பயங்கரவாத இயக்கமான புலிகளியக்கத்தை அழித்த பாதுகாப்பு படையினருக்கு இச் சிறிய அமைப்பை அழித்தொழிக்க தகமை உண்டு. அனால் சில இரகசியக் காரணங்களுக்காக இராணுவத்தினருக்கு அரசினால் கட்டளையிடப்படவில்லை என தெரிவித்துள்ள மனோ கணேசன் வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவிற்கோ அன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கோ ஏதாவது நிகழுமாயின் அரசே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, அவ்வாறான அமைப்பொன்று கிழக்கில் இல்லை எனவும் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புலனாய்வு பிரிவினர் முயற்சித்துவருவதாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com