Tuesday, October 6, 2009

த.தே.கூ - மு.கா கூட்டுமன்னணியுடன் இணையும் நோக்கம் இல்லை என்கின்றார் பிள்ளையான்.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ளதாக கூறப்படும் கூட்டுடன் சேரும் நோக்கம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என்ற அடிப்படையில் ரவுப் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நாடாத்தியுள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்முயற்சி கலந்துரையாடல் நிலையிலேயே இருக்கின்றபோதும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தமிழ் கட்சிளுடன் இணைவதிலும் பார்க்க எதிர்கட்சி அல்லது ஆளும் கட்சிகளுடன் இணைவது மிகுந்த பலனை கொடுக்கும் என்பது அவர்களது கருத்தாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com