இரு கால்களையும் இழந்த படைவீரனை மாகாண சபை உறுப்பினராக்கியுள்ளளோம்.
30 வருட கொடிய யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்ட படையினரை தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அவர்களை அரசியல் அனாதைகள் ஆக்கவேண்டாம் என ஊடகத்துறை அமைச்சர் அயேவர்த்தன யாப்பா கேட்டுக்கொண்டுள்ளார். எமது இராணுவத் தளபதி ‘Salvation Army’ க்கு பொருத்தமற்றவர் என தெரிவித்தவர்கள், இன்று அவரை தேர்தலில் முன்னிறுத்தி தாம் வெற்றி கொள்ள நினைக்கின்றனர். ஆனால் நாம் அவ்வாறில்லை இரு கால்களையும் இழந்த இராணுவ வீரர் ஒருவரை மாகாண சபை உறுப்பினர் ஆக்கி இருக்கின்றோம்.
அத்துடன் நாம் படைவீரர்களை அரசியலுக்கு கொண்டுவந்துள்ள போதிலும் அவர்களை நாம் கைவிடவில்லை, மேலும் அமைச்சு ஒன்றின் செயலாளர் என்பது இலங்கை நிர்வாக சேவையில் உள்ள உயர்ந்த பதவியாகும். அவ்வாறான பதவி ஒன்றிற்கு ஒருவரை நியமிப்பது பதவி உயர்வே அன்றி பதவி இறக்கம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment