Wednesday, October 28, 2009

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் அலறி மாளிகை அருகே நிறைவுற்றது.

மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் தலைவர்களை விடுதலை செய்யக்கோரியும், பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிடக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊரணி அலறி மாளிகைக்கு அருகில் முடிவடைந்தது.

கொள்ளுப்பிட்டி சந்தியில் பாரதூரமான அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் முடிவடைந்த இவ்வார்ப்பாட்ட பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி எரியூட்டப்பட்டதுடன் அரசிற்கு எதிரான பலத்த கோஷம் எழுப்பப்பட்டதையும் காணமுடிந்தது.

பாதுகாப்பு வலயத்தினுள் நுழையும் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நோக்கில் விசேட பொலிஸார் காவல்கடமையில் ஈடுபட்டிருந்தபோதும் மாணவர்கள் எவரும் எல்லை தாண்டிச் செல்லாமையால் அங்கு கைதுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com