Sunday, October 25, 2009

காத்தான்குடி பிரதேசத்தில் புதிய புத்தர் சிலை நிறுவப்படுகின்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு புத்தர் சிலை வைபவரீதியாக வைக்கப்படவிருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதேச மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஒலி பெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி புத்தர் சிலை நாவற்குடா பிரதான வீதியிலிருந்து ஊர்வலமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துவரப்படும். இதற்காக காத்தான்குடி நாவட்குடா பிரதான வீதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com