இலங்கை கடற்படையில் சீனர்களும் இருக்கிறார்களாம். வை.கோ அதிர்ச்சி தகவல்.
பிரபாகரன் தலைமையில் போராட்டமும் ஆரம்பமாகுமாம்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 3 நாள் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் ஆரம்பமானது. இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்து பேசிய கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியா கட்டுப்பணத்தை இழந்துவரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இலங்கை கடற்படையில் சீனர்களும் இருக்கிறார்கள். நமது மீனவர்களை சிங்களர்களுடன் சேர்ந்து சீனர்களும் தாக்குகிறார்கள். ஏற்கெனவே, வடக்கிலும் கிழக்கிலும் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் சீனா, தற்போது ராமேஸ்வரத்திலும் தாக்குதல் நடத்தி பெரும் நெருக்கடி தரத் தயாராகிவிட்டது என கூறினார்.
ஆத்துடன் இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும் அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால் வைகோ கூறும் பிரபாகரன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அல்ல என்பது ஊர்ஜிதமாகியுள்ள நிலையில், வைகோ கைதாகி ஆயுதக் கிளர்சி ஒன்றை முன்னெடுக்கவுள்ள பிரபாகரன் யார் என விசாரிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது:
0 comments :
Post a Comment