Thursday, September 3, 2009

பதவி உயர்வுகோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நீதிமன்றில்.

பொலிஸ் திணைக்களத்தில் அண்மையில் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளில் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நான்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நீதிமன்று சென்றுள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளோரில் சிலர் தம்மிலும் இளநிலை அதிகாரிகள் என தெரிவித்துள்ள அவர்கள், தமக்கான பதவி உயர்வுகளுக்கு நீதிமன்று பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடவேண்டும் என கோரியுள்ளனர்.

குறிப்பிட்ட மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுப்பது என முடிவு செய்துள்ளது. அத்துடன் மனுதாரர்களான நான்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்குவதில் பொலிஸ் மா அதிபருக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டாயின் அவற்றை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் மற்றிற்கு அறியத்தருமாறு பிரதம நீதியரசர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன் மனுதாரர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியுமா என்பது தொடர்பான விசாரணை ஒன்றினை நாடாத்தி அறிக்கை சமர்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தையும் வேண்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com