Wednesday, September 23, 2009

பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது .

இந்திய ராணுவத்தில் சிப்பாயாக, 5 ஆண்டுகள் வேலை செய்து வந்தவர், சுதான் சுதாகர். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர், 2007-ம் ஆண்டு, ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் பாட்னா அருகே உள்ள கான்கர் பாக் என்ற இடத்தில் பதுங்கி இருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்து, போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர் பாகிஸ்தானின் உளவு நிறுவனத்துக்கு (ஐ.எஸ்.ஐ.) ஏஜெண்டாக செயல்பட்டது உறுதிப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இந்திய ராணுவம் பற்றிய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com