Sunday, September 27, 2009

சுவிஸ்வாழ் தமிழ்மக்களே ஏமாறாதீர்கள்!! 'மீண்டும் புறப்பட்டு விட்டான் 'புங்குடுதீவு சுரேஸ்'..!!!

முள்ளிவாய்கால் பிரதேசத்தில் ரணகளத்தில் சிக்குப்பட்டு இரத்தமும் சதையுமாய் குற்றுயிராய் கிடந்தவர்களையும், பிணங்களாய் கிடப்பவர்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து, மரண ஓலமிடும் மனிதர்களை கூட நின்றுகூட பார்க்க நேரமில்லாமல் ஒவ்வொருவரும் தமது உயிர்களை கையில் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் உயிர்போகின்ற நிலைமையிலிருந்து மீண்டு, எங்கோ ஓர் திக்குதிசை தெரியாமல் ஓடி, யாரோ நமது உயிர்களை காப்பாற்ற போகிறார்கள் என்றெண்னி ஒடிவந்த மக்கள் இன்று.. வெறும் உயிருடன் மனம் வெதும்பி துன்பம் மிகவுழன்று, துயர் நிறைந்த வாழ்கையில் மீண்டும் சிக்குப்பட்டு முள்ளுக்கம்பிகுள் முடங்கி போயியிருக்கிறார்கள்.

'ஆத்திரத்தை அடக்கலாம் மூத்திரத்தை' அடக்க முடியாது என்பார்கள் அதைபோன்று இயற்கையின் உபாதைகளை கூட அடக்கிக் கொண்டு, வசதியாக பலவளங்களுடன் வன்னியில் வாழ்ந்த மக்கள் இன்று சேரிக்குடியிருப்புகளில் வாழ்வது போன்று வவுனியா உள்ள மினிக்காம்புகளில் வன்னி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வன்னிமக்களை வைத்துத்தான் கிட்டதட்ட 15வருடங்களாக புலித்தலைமையும், புலம்பெயர் புலி முகவர்களும் பிழைப்பு நடத்தினார்கள்.

'யானை இருந்தாலும் ஆயிரம் பொன் பெறும்' 'இறந்தாலும் ஆயிரம் பொன் பெறும்' என்பது போல அன்று புலிகள் வைத்து கொண்டு பிழைப்பு நடத்திய வன்னி மக்களை, இன்று மகிந்த அரசாங்கமும், ஐ.நா. மன்றத்தினரும் வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவது ஒரு புறமிருக்க.. அவர்களின் அத்தியாவசிய, அடிப்படை தேவைகளை பெரும் சிரமத்துக்கு மத்தியில் அரசாங்கம், ஐ.நா உலக உணவு அமைப்பினரும் ஒன்றுசேர்ந்து நிவாரண முகாம்களில் வாழும் மக்களுக்கு முடிந்தளவு, ஓரிரு குறைபாடுகள் இருந்தாலும் சீரான முறையில் செய்து கொண்டு தான் இருக்கிறது.

'ஆனால், அந்த மக்களுக்கு எந்தவித உதவியுமே செய்யாமல், அவர்களை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்கள் மீண்டும் அவர்கள் படும் அவலங்களை மட்டுமே மையபடுத்தி புலம்பெயர் நாடுகளில் வாழும் சில புலிபினாமி பிழைப்பாளர்கள் தங்கள் பிழைப்பை நடத்துவதற்கு தொடங்கியுள்ளார்கள். 'ஆடு நனைகிறது என் ஓநாய் ஊளையிட்ட மாதிரி' வன்னி மக்கள் படும் அவலத்தை நினைத்து ஊளையிட்டு (பாடி) இறுவட்டு ஒன்றை வெளியிட்டு அதில் ஊழையிடுபவர்கள் தங்கள் படத்தையும் தமிழீழத்தையம் பதிவு செய்து தங்களை தாங்களே வன்னி மக்களுக்க உதவிபுரிபவர்களாக பறைசாற்றிக் கொண்டு வன்னி மக்களின் அவலங்களை புலம்பெயர் மக்களிடம் புலம்பியழுது புதிதாய் பணம்சேர்க்க புறப்பட்டு வருகிறார்கள்.

முள்ளுக்கம்பிக்களுக்குள் முடங்கிப் போய்யிருக்கும் மக்களின் அவலத்தை பயன்படுத்தி நாம் கொஞ்ச அவலாக(காசை) அள்ளலாமா? என்றெண்னி எல்லோரையும் ஏய்க்கும் நோக்கம் கொண்டு எம்மிடையே வருகிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல புலிகள் உயிருடன் இருக்கும் பொழுது புலம்பெயர் தமிழர்களின் இரத்தத்தை ஒட்டுண்ணிகள் போல் உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தவர்கள் 'மேமாதம் 19ம்திகதிக்கு' பிறகு கொஞ்ச நாளாக இறந்து போய் கிடந்தவர்கள் மீண்டும் உருத்திரகுமாரன் தலைமையில் உயிர்தெழுந்து முள்ளுகம்பிக்குள் முடங்கிப் போயிருக்கும் மக்களை முன்னிறுத்தி முகாரி ராகம் பாடிக்கொண்டு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து எதையாவது புடுங்கலாமா? என்றெண்ணி புலம்பெயர் புலிமுகவர்கள் புறபட்டு மீண்டும் வருகிறார்கள்..

இந்த புலிமுகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவை சேர்ந்தவரான சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக சொல்லிக் கொண்டு 'முகாரி ராகம்' பாடிக்கொண்டு புறப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இவர், முன்னர் புலிகள் உயிருடன் இருந்த போது அவர்களின் ஆதரவுடனும் அவர்களுக்கு உதவி புரிவதற்காகவும், புங்குடுதீவு வாழ் மக்களுக்கு உதவப்போவதாக கூறிக்கொண்டும் 'புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்' என்ற பெயரில் (இவருடன் கொஞ்சபேரும் சேர்ந்து) ஓர் அமைப்பை தொடங்கி புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றியவர் என்பது சுவிஸ் வாழ் புங்கையூர் மக்கள் யாவரும் நன்கு அறிந்ததே.

இவர் புங்குடுதீவு மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களையும் ஏமாற்றியவராவார். 'மேல் மருவத்தூர் அம்மன் கோயில' என்ற ஒரு கோயிலை நிலம் வாங்கி தான் சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலச்சம் பிறாங்குகளை சுவிஸ் வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டுள்ளார். இவர் கோயிலை அமைக்கப் போவதாக சொல்லி சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் வாங்கிய காசுக்கு கோயிலையும் கட்டவில்லை குளத்தையும் கட்டவில்லை.

இவர், தற்பொழுது பேர்ன் மானிலத்தில் புறுக்டோப் (கீர்க்பேர்க்) எனும் இடத்தில் ஒரு மேல் மருவத்தூர் அம்மன் கோயில் ஒன்றை தற்காலிகமாக அமைத்து அந்த கோயிலுக்கு தானே பூசகராகவும் இருக்கிறாராம். கடவுளுக்கு பூசை செய்பவர்களுக்கு வேதாகமங்கள், மந்திரங்கள் என்று ஏதாவது கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படையாகும். ஆனால் இந்த மேல் மருவத்தூர் அம்மன் கோயில் பூசாரிக்கு மந்திரமும் தெரியாது ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது அவருக்கு தெரிந்தது எல்லாம் 'தந்திரம்' மாத்திரமே. அதாவது தமிழர்களை வைத்து எப்படியெல்லாம் பிழைக்கலாம் என்கிற தந்திரத்தை மட்டுமே அவர் கற்று தெரிந்து கொண்டவர்.

புலிகள் உயிருடன் இருக்கும்போது புலம்பெயர் தேசங்களில் வாழும் புலிமுகவர்கள் பல ஆயிரக்கணக்கான அமைப்புகளை பல்வேறு பெயரில் தோற்றுவித்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை அள்ளினார்கள். அதில் ஈடுபட்ட புலம்பெயர் புலிப்பிரமுகர்கள் எப்படியாவது இந்த அமைப்புகளிடையே புகுந்து தமிழர்களிடையே பிரபலமாகலாம் என்பதோடும், தமிழர்களின் காசுகளை ஏமாற்றி வாங்கிக் கொள்ளலாம் என்ற கள்ள நோக்கத்தோடும் 'தமிழனை ஏமாற்றி பிழைப்பதற்காக உருவாக்கப்பட்ட' இவ்வமைப்புகளில் புகுந்து கொண்டு நல்ல வருமானத்தை கடந்த காலத்தில் ஈட்டி, வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றையும் வாங்கி தங்கள் வாழ்வையும் வளத்தையும் பெருக்கிக் கொண்டார்கள். அவர்களில் இவரும் ஒருவர்தான் நாம் மேலே குறிபிட்ட 'தந்திரம்' மட்டுமே தெரிந்த மேல் மருவத்தூர் அம்மன் கோயில் பூசாரியான புங்குடுதீவை சேர்ந்த சுரேஸ் என்பவராவார்.

இவர் புலிகளின் ஆதரவு அமைப்புகள் பலவற்றில் தன்னை இணைத்துக் கொண்டு பல வழிகளிலும் காசை சம்பாதித்தவர். இப்பொழுது புலிகளின் உயிர் பிரிந்தவுடன், வன்னியில் முள்ளுக்கம்பிகளுக்குள் வாழும் மக்களை நினைத்து 'முகாரி' ராகம் பாடி காட்டி புங்கையூர் மக்களிடமிருந்து காசு புடுங்குவதற்கு புறபட்டு வாராராம்.. வெகுவிரைவில் இவர் தமிழ்நாட்டிலிருந்து யாரையோ சில பிரமுகர்களை அழைத்து வந்து ஒரு விழா நடத்தி புங்குடுதீவு மக்கள் எல்லோரையும் அழைத்து தனது 'முகாரி ராகத்தை' பாடி காட்டி புங்குடுதீவு மக்களுக்கு பரவசம்மூட்டி அவர்கள் பரவசமடைந்திருக்கும் போது அவர்களின் பைகளிலில் இருக்கும் பணத்தை பறிப்பதற்கு வருகிறாராம்..

வன்னியில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய, மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் உணவு வழங்கள் போன்வற்றை ஐ.நா வின் அகதிகள் அமைப்பும், அரச அத்தியாவசிய சேவைகள் திணைகளமும் சேர்ந்தே செய்து வருகின்றன. அத்தோடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறிபிட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களை தவிர வேறு யாரும் வன்னியில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்கவோ அல்லது அரச அனுமதியின்றி வன்னி முகாம்களில் உள்ள மக்களை பார்வையிடவோ முடியாத நிலை காணப்படுகிறது.

குறிப்பாக ஐ.நா. உலக உணவுத்திட்டதின் மூலமே வன்னி முகாமில் உள்ள மக்களுக்கான உணவு வினியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அகதி முகாம்களில் உள்ளவர்கள் யாராவது பட்டினியால் இறந்தால் அதற்கு ஐ.நா மன்றமே பொறுப்பு என கடந்த காலத்தில் அரசுகூட அறிவித்திருந்தமையையும் நாம் அறிவோம். சர்வதேசத்தால் அறியப்பட்ட அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனங்கள், இலங்கையில் இருக்கும் முக்கிய எதிர்கட்சிகளான ஐ.தே.கட்சி, JVP, தமிழ்தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காஙகிரஸ் மற்றும் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளே அகதி முகாம்களுக்கள் போய் அந்த மக்களை பார்வையிடவோ அவர்களுக்கு உதவி செய்யவோ முடியாத நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் தடுத்து வைத்திருக்கிறது. நிலமை இப்படியிருக்கையில்..
புங்குடுதீவை சேர்ந்தவரான சுரேஸ் என்பவர், முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஏதோ அவருடைய அவலக்குரலில் 'முகாரி ராகம்பாடி' அதை இறுவட்டு மூலம் வெளியிட்டு புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க போவதாக நாம் அறிகிறோம்.

இவர், இப்படி அழுது குழறி புங்குடுதீவு மக்களிடம் ஏமாற்றி வாங்கும் பணத்தை எப்படி வன்னியில் முகாம்களில் உள்ள மக்களுக்கு கொடுப்பார்??; என்பதையிட்டு கொஞ்சம் விழிப்படைந்து புங்குடுதீவு மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான் ஆனால் இது மிகவும் வருந்ததக்கதும், மோசமான மோசடியுமாகும். ஏன்எனில் வன்னி முகாம்களில் இருப்பவர்கள் படும் துன்பங்களும், துயரங்களும் வார்தைகளில் சொல்ல முடியாதவைகள் என்பது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல ஐ.நாடுகள் அமைப்பினரிலிருந்து உல நாடுகளே கவலைப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்த அறிக்கையானது ஒரு தனிப்பட்ட 'சுரேஸ்' என்ற மனிதரின் மேல் கொண்ட காழ்ப்புணர்சியில் இந்த அறிக்கையை நாம் வெளியிடவில்லை மாறாக 'தமிழ் சமுதாயமே, புங்குடுதீவு மக்களே, கொஞ்சமேனும் உங்கள் இதயத்தை திறந்து பாருங்கள் மனிதர்களின் படும் துன்பத்திலேயே பிழைப்பு நடத்துபவர்கள் மனித ஐன்மங்களே கிடையாது. இந்த வன்னிமக்களின் அவலத்தை காட்டி பிழைப்பு நடத்துவது எப்படிபட்ட பிழைப்பு என்றால் யாரோ பெத்த ஒரு ஊனமுற்ற ஒரு பிள்ளையை வாடகைக்கு வாங்கி அந்த பிள்ளையை பொதுமக்களிடம் காட்டி இந்தியாவில் சிலபெண்கள் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். அந்த மாதிரியான பிழைப்புத் தான், இந்த சுரேஸ் என்பவரால் வெகுவிரைவில் 'வன்னி மக்களுக்காக' எனச்சொல்லி நடத்தப்படவிருக்கின்ற 'இறுவெட்டு வெளியீட்டு விழா' நிகழ்ச்சியாகும்.

சுவிஸ்வாழ் தமிழ்மக்களே இதையிட்டு மிகவும் விழிப்பாயிருங்கள் கடந்த காலங்கள் போல் திரும்பவும், திரும்பவும் ஏமாறாதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவரின் லீலைகள் பற்றியதான சில தரவுகளை நாம் உங்களுக்கு கீழே அறியத் தருகிறோம்..

இவர் ஏற்கனவே, சுவிஸ் வாழ் மக்களிடமிருந்து மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கட்டுவதாக பல இலச்சக்கணக்கான பிறாங்குகளை சேர்த்து மக்களை ஏமாற்றியதோடு, புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் என்ற பெயரில் புங்குடுதீவுக்காக காசு சேர்ப்பதாக சொல்லி கொண்டு இந்தியாவிலிருந்து கவிஞர் வைரமுத்துவை கூப்பிட்டு பெருவிழா எடுத்து புங்குடுதீவு மக்களிடம் பல இலச்சம் சுவிஸ் பிறாங்குகளை கையாடல் செய்தவர்களில் ஒருவர். (இவாகள் -புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முன்னாள் முக்கியஸ்தர்கள்- புங்குடுதீவு அபிவிருத்திக்கென சேர்த்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் பிராங்குகளில் புங்குடுதீவு சாட்டிவீதி அபிவிருத்திக்கென இரண்டாயிரம் சுவிஸ் பிராங்கும் புங்குடுதீவில் உள்ள ஐந்து பாடசாலைகளுக்கு ஒன்பதினாயிரத்து ஐநூறு சுவிஸ் பிராங்கும் புங்குடுதீவு வைத்தியசாலைக்கென பதினையாயிரம் சுவிஸ் பிராங்குமாக மொத்தம் இருபத்தாறாயிரத்து ஐந்நூறு சுவிஸ் பிராங் மட்டுமே இதுவரை (பதினைந்து வருடங்களில்) புங்குடுதீவுக்காக செலவழிக்கப் பட்டுள்ளது.

ஆனால் கவிஞர் வைரமுத்துவை சுவிஸ் வரவழைத்து காலில் விழுந்து கொண்டாடிய களியாட்டத்திற்கு செலவழித்த செலவோ (மொத்த செலவு) 24675பிராங் 40ராப்பன்! (அதிலும் வைரமுத்துவின் தங்குமிட -ஓட்டல்- செலவு மட்டும் 2617பிராங், விமானச்சீட்டு 1310பிராங், நினைவுப்பரிசு 550பிராங், விளம்பரம் 1144பிராங், நடனஇசைக்குழுக்களின் செலவு 4000பிராங் இப்படிப் பலதரப்பட்ட செலவுகளின் மொத்தமாக வைரமுத்துவுக்காக செலவழிக்கப்பட்டது மட்டும் 24675பிராங் 40ராப்பன்!) தமிழீழக் கலைஞர் சாந்தன் உட்பட்ட கலைஞர்களுக்கான நிகழ்ச்சிச் செலவு 8300பிராங் 80ராப்பன் செலவு! இவ்விரண்டினதும் மொத்தச் செலவே 32976பிராங் 20ராப்பன்!! இதுபோன்று பல களியாட்ட, அஞ்சலி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது. அதன் செலவெல்லாம் எவ்வளவு?? இதுவெல்லாம் தேவையா??? புங்குடுதீவு மக்களே சிந்தியுங்கள்!! ஆனால் புங்குடுதீவுக்காக மொத்தம் இருபத்தாறாயிரத்து ஐந்நூறு சுவிஸ் பிராங் மட்டுமே இதுவரை (பதினைந்து வருடங்களில்) செலவழிக்கப் பட்டுள்ளது.

தமது பெயருக்கும் புகழுக்காகவும் மட்டுமல்ல தாம் சொந்த வீடும் சொகுசு காருமாக சுகபோகமாக வாழ்வதற்காக 'புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்' எனும் பெயரில் புங்குடுதீவு மக்களின் தலையில் மிளகாய் அரைத்த சிலரில் இந்த சுரேசும் ஒருவர். இவர் மக்களை ஏமாற்றி பிழைப்பதில் கைதேந்தவர் என்பதை புங்குடுதீவு மக்கள் நன்கு அறிவார்கள். இப்போ பெரிய, பெரிய கட்சிகள், வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் போன்றனவே வன்னி மக்களை பார்வையிடவோ அல்லது உதவி செய்யவோ முடியாமல் அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், சுரேஸ் என்பவர் வன்னியில் உள்ள அகதி முகாம்களில் வாழும் மக்களுக்காக என காசுசேர்த்து எப்படி உதவுவார் என்பதை சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் சற்றேனும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பார்களா???

சுரேஸ் என்பவரும் கடந்த காலங்களில் பல்வேறு வகையில் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைத்துள்ளார் என்பதை அனைவரும் அறிவோம். மீண்டும் மீண்டும் நம்மை ஏமாற்றுவதற்கு புதிய திட்டத்துடன் வருகிறார். இதையிட்டு மிகுந்த அவதானத்துடன் புங்குடுதீவு மக்கள் மட்டுமல்ல சுவிஸ்வாழ் தமிழ் மக்களாhகிய நாம் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அகதி முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கை என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத நரக வாழ்க்கையாகும். அவர்களின் வாழ்வின் அவலத்தில் சுரேஸை போன்ற பிழைப்புவாதிகள் குளிர்காய முற்படுகிறார்கள் என்பதே நமது ஆதங்கமாகும்..!!

நன்றி. -சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com