Sunday, September 20, 2009

நோர்வே ஈழத்தமிழர் அவை பொதுக்கூட்டம்.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் பொதுக்கூட்டம் இன்று நோர்வேயில் புலிகளினால் நிர்வகிக்கப்படும் அன்னை பூபதி பாடசாலையில் இடம்பெற்றது. கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குதிரை கஜேந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் வட்டுக்கோட்டை சாதியப் பிரகடணத்தை அடிப்படையாக கொண்டு நோர்வேயில் தேர்தல் ஒன்றை நாடாத்தி நோர்வே தமிழீழ பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதென முடிவெடுத்துள்ளனர்.

நோர்வே அரசியல் யாப்பிற்கு முற்றிலும் முரணான இச்செயற்பாடுகள் நோர்வே அரசின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதுடன் நோர்வே அரசு இது தொடர்பாக தனது பார்வையை திருப்பும்போது இதன் ஏற்பாட்டாளர்களான புலிகள் வழமைபோல் இதன் முழுப்பழியையும் மக்கள் மீது போட்டு தப்பி விட அதன் எதிர்விளைவுகளை மக்களே சந்திக்கநேரும் எனக்கருதப்படுகின்றது. எனவே மக்கள் இவ்விடயங்கள் தொடர்பாக விழிப்பாக இருந்து புலிகளின் எச்ச சொச்சங்களின் சதிவலைகளில் சிக்காது தம்மை காத்துக்கொள்வது சிறந்தாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com