Monday, September 14, 2009

இராணுவ அதிகாரி ஒருவர் படைச்சிப்பாயினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் இரண்டாம் லெப்டினட் தர இராணுவ அதிகாரி ஒருவர் படைச் சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

டபிள்யூ. எம். ரட்ணசிறி எனப்படும் குறிப்பிட்ட அதிகாரி தூக்கத்தில் இருந்த சிப்பாயை இழுத்து எழுப்பியபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிபோது சிப்பாய் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். சந்தேக நபரான சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது ரி 81 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com