Friday, September 4, 2009

நோர்வே புலிகளின் புலனாய்வுத் துறையை சேர்ந்த ஒருவர் கொழும்பில்.

நோர்வே நாட்டில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக நோர்வேத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயில் புலிகளின் புலனாய்வு வேலைகளின் நிமிர்தம் நிறுவப்பட்டுள்ள ரிப்டொப் எனும் கடையில் காசாளராக செயற்பட்டுவரும் இவர் நோர்வே நாட்டில் உள்ள புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.

யாழ்பாணம் பாசையூர் பிரதேசத்தை சேர்ந்த இவர் நோர்வேயில் புலிகள் சார்பாக இடம்பெற்ற பல ஆர்பாட்டங்களின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்டு வந்துள்ளதுடன் அவ் ஆர்பாட்டங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தாக்கியமைக்காக பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். குறிப்பிட்ட விசாரணைகளின் போது அவர் சில ஊடகவியலாளர்களை புலிகள் சார்பாக விசாரித்தது உண்மை என ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

நோர்வே பிரஜாஉரிமையை பெற்றுக்கொண்டுள்ள ரொபின் என பலராலும் அறியப்படும் இவர் புலிகளின் இறுதிக்காலம் வரை புலிகளின் பிரதி புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில் அம்மானின் கட்டளையின் கீழ் செயற்பட்டுவந்ததாக நோர்வே புலிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

புலிகளின் ஊடுருவல்களுக்கு இலக்காகியுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை இவர் பேணிவந்ததாக நம்பப்படுகின்றது. அத்துடன் ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் அமைப்புக்களில் நெருங்கிய உறவினர்களை கொண்டுள்ள இவர் அவர்களின் உதவியுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com