Wednesday, September 16, 2009

சனல் 4 க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அராய சட்டமா அதிபர் லண்டனில்.

இலங்கை படையினருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட சர்சைக்குரிய காட்சிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அவர்கள் லண்டன் சென்றுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

லண்டன் செல்லும் சட்டமா அதிபர் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சட்டத்தரணிகளை சந்தித்து அலோசனை நடத்துவார் எனவும் லண்டன் ஊடக முறைப்பாடு ஆணையகத்திற்குச் சென்று அவர்களுடனும் இது தொடர்பாக பேசுவார் என அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com