Sunday, September 13, 2009

வாகரை மகாவித்தியாலய மீள் நிர்மானத்திற்காக 30 கோடி நீதி ஒதுக்கீடு.

சுனாமி பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீள் நிர்மானம் செய்து வரும் அரசு வாகரை மகாவித்தியாலய மீள் நிர்மானப்பணிகளுக்காக 30 கோடி ரூபா ஒதிக்கியுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். முற்றிலும் சேதமடைந்த பாடசாலைகளில் வாகரை மகா வித்தியாலயமும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இப்பாடசாலை மாணவர்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி பயின்று வருவதாகவும் அவற்றை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் உள்ள மிகவும் பிரபலமான பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை திருத்தவேலைகள் முடிவில் அது பல நவீன வசதிகளைக் கொண்டிருக்கும் எனவும் அது தமிழ் சமூகத்தின் கல்வி வழர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் அரசு பாடசாலையை புனருத்தாபனம் செய்து முடிக்கும் போது முன்னாள் புலிகளான இன்றைய அரசியல் வித்துவான்கள் என தம்மைக் கூறிக்கொள்வோர், கொழும்பில் இருந்து மாலைகளுடன் சென்று அங்குள்ள மக்களை கொண்டு அவற்றை தமது களுத்துக்களில் போட்டுக்கொண்டு 32 புகைப்படங்கள் பிடித்து தமது இணையத்தளங்களில் போட்டு அளகு பார்பர் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com