Tuesday, September 15, 2009

242 கிலோ வெடிமருந்துகள், 6733 துப்பாக்கிரவைகள் மீட்பு

242 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 56 கிலோ எடையுள்ள 11 கிளேமோர் குண்டுகள், 6733 பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் தாராவிக்குளம் பிரதேசத்திலிருந்தே இந்த வெடிமருந்துகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிழக்கில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 232 வது படையணியினர் தாராவிக்குளம் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்திலிருந்து ஒவ்வொன்றும் 27.5 கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் 04 (இதன் மொத்தத் தொகை 110 கிலோ) ரி-56 ரக ரவைகள் - 2250, வெடிக்கவைக்கும் கருவிகள் - 4000 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் புலிகளால் கைவிடப் பட்ட நிலையில் காணப்பட்ட பெருந்தொ கையான ஆயுதங்களை இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் மீட்டெ டுத்துள்ளனர்.

132 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய் ந்த வெடிமருந்துகள், 10 கிலோ எடை யுள்ள வெடிமருந்து தூள்கள், 16 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் - 02, 5 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் - 02, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் -07 (இதன் மொத்தத் தொகை 56 கிலோ) வாகனங்களுக்கு பொருத்தக் கூடிய தற்கொலை குண்டுகள் - 19, தற் கொலை அங்கிகள் - 57, 9 மி.மீ. பிஸ்டல் ரவைகள் - 4409, வெடிக்கவைக்கும் கரு விகள் - 1219, 82 மி. மீ. மோட்டர் குண்டு கள் - 132 மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com