Sunday, August 23, 2009

பா.ஜனதா தலைவர் சுட்டுக் கொலை: போலீஸ் நிலையத்தில் பயங்கர கலவரம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் நிலையத்துக்குள் பா.ஜனதா தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பல்வந்த்சிங் உயிரைக் காப்பாற்ற தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரக்காரர்கள் போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்து, எரியும் தீக்குள் ஒரு போலீஸ்காரரை தூக்கிப் போட்டு உயிரோடு எரித்துக் கொன்றனர்.

கலவரக்காரர்கள் தாக்கியதில் 3 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். போலீசார் நடத்திய தடியடி மற்றும் வானத்தை நோக்கி சுட்டதில், ஒரு பெண் உள்பட பலர் காயம் அடைந்தனர். இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்த முதல்-மந்திரி ரமேஷ் பொக்ரியால், பா.ஜனதா தலைவர் போலீஸ் நிலையத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட போது பணியில் இருந்த அனைத்து போலீசாரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com