Tuesday, August 18, 2009

வடக்கில் உள்ள பாதுகாப்பு நிலைகள் நீக்கப்படமாட்டாது.

வடக்கில் சமாதானமான ஓர் சூழ்நிலை காணப்படுகின்றபோதும் அங்கு மறைந்துள்ள புலிகளை முற்றாக கண்டுபிடித்து அகற்றும்வரை அங்குள்ள பாதுகாப்பு நிலைகள் எந்தத் காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கண்டியில் அஸ்கிரியபீடத்து மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பில் இதை தெரிவித்த அவர், யாழில் மறைந்துள்ள புலிகளில் மிகவும் கடும்போக்கான பயங்கரவாதிகளும் காணப்படுவதாகவும் அவர்களை பிடிப்பதற்காக படையினர் வலைவிரித்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் வடக்கில் காணப்படும் தற்காலிக முகாம்களுக்கு பதிலாக நிரந்த படைமுகாம்களை கட்டியெழுப்புவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com