Wednesday, August 5, 2009

அமைச்சர் டக்ளஸ் கவசவாகனங்களில் சென்று வாக்குகள் கேட்கின்றாராம். !!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச படையினரின் பலத்த பாதுகாப்புகளுடன் கூடிய கவசவாகனங்களில் சென்று யாழ்ப்பாணத்தில் வாக்கு கேட்பதாக கருணாவின் ஆட்களால் நாடாத்தப்படும் இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

அச்செய்தியின் முழுவடிவம்.

வடக்கே உள்ளுராட்சி தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் டக்ளஸ் தேவானந்தா தன்னை பாதுகாக்க கவசவாகனங்களில் இராணுவப்படையின் பலத்த காவலின் மத்தியில் வாக்குகள் பெற மக்கனை சந்தித்துவருகின்றார் என்று வடக்கு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 30வருட அரசியல் வாழ்க்கையில் தமிழர்கள் மத்தியில் முதல்முறையாக இப்படியான ஒரு பந்த நிலையில் தேர்தல் கேட்கும் தமிழ் தலைவர் இவர்தான். ஆனால் இவர் தேர்தலில் வென்றால் மக்கள் இவரை சந்திப்பது ஒரு காணல் நீராகவே இருக்கும் அல்லது மக்களும் கவசவாகனத்தில் செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும். என்றே அங்கு கருத்துக்கள் கிளம்பி வருகின்றது.

கவசவாகனத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு சென்றதும் மாணவர்கள் என்ன செய்வது என்ற நிலையில் கையைதட்டி வரவேற்றார் கள். யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாணவர்களுடான சந்திப் பொன்றி னையும் அவர் நடத்தியிருந்தார். அங்கு பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் எதோரு வகையில் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா கடந்தகாலத்தில் பல்கலைக்கழக சமூகத்தில் நடந்த பல குழறுபடிகளுக்கு எந்த ஒரு தீர்வும் முன்வைக்கவில்லை என்பது தான் பெரும் கவலை.

கடந்தகாலத்தில் இராணுவத்தினரால் அடித்து இழுத்தச்சென்று சிறையில் போடப்பட்ட பல மாணவர்களின் நிலைகள் பற்றிய எந்த ஒரு கவலையும் இல்லாத அமைச்சார் வருங்காலத்து மாணவர்களை எப்படிகாப்பாற்றுவார்? சமூகத்திற்கு எப்படி நல்லது செய்வார்?? என்ற ஆவேசங்கள் அதிகரித்து வருகின்றுறது. அந்த குளறுபடிகளுக்கு எதிர்த்து குரல்கொடுக்கும் சிலர் இன்னும் திசை திருப்பப்பட்டு விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் சுயலாபத்திற்காக பல்கலைக்கழக மாணவர்களின் நலன்களை கருதாது குழறுபடிகளை தூண்டி விட்டு குளிர்காயும் இத்தகைய அமைச்சார்கள் தான் என்ற கசப்பான உண்மைகளில் இருந்து அந்த மாணவர்கள் வெளியில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்தகாலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தன்மையை மறைக்கத்தான் டக்ளஸ் தேவானந்தா இத்தகைய கவச வாகனங்களில் இராணுவ பரிகாரங்களோடு பல்கலைக்கழகம் சென்றார் என்ற குற்றுச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றது.

என அச்செய்தியில் குறிப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் காய் நகர்த்தல்களில் அரசுடன் இணைந்து கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகளின் கோழிச் சண்டையை விலக்கு பிடிக்க மஹிந்த அரசிற்கு விசேட அதிரடிப் படையணி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மேற்கண்டவாறு கவச வாகனங்களில் சென்று வாக்கு கேட்டார் என தமது பங்குதாரர்களாலேயே குற்றஞ்சுமத்தப்படுகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிஆர்ரி வானொலியில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் விசேட கொமாண்டோ படையணியின் உதவியுடன் கவசவாகனங்களில் சென்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் அமைச்சர் டக்களஸ் பல்கலைக்கழகத்திற்கு கவசவானத்தில் செல்கின்றார் என குற்றஞ்சுமத்தும் கருணாவின் ஆட்கள் தமது தலைவர் மட்டக்களப்பில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலைகளில் உள்ள சிறார்களுக்கு பரிசளிக்க செல்லும் போது அதிபயங்கர ஆயுதம் தாங்கிய விசேட கொமாண்டோக்களுடன் சென்று அங்கு இறங்குவது மட்டுமல்லாமல் மாணவர்கள் மத்தியிலும் ஆயுதம்தாங்கிய கொமாண்டோக்களுடன் செல்லும்போது அம்மாணவர்களின் மனநிலை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட மறுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com