Friday, August 21, 2009

இந்தியாவால் ஆபத்து இல்லை. பாக், மக்கள் கருத்து

இஸ்லாமாபாத் : இந்தியாவைவிட, அமெரிக்காவால் தான் தங்களுக்கு அச்சுறுத்தல் அதிகம் என, பாகிஸ்தான் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அல் ஜசீரா தொலைக்காட்சிக்காக, கேல்அப் பாகிஸ்தான் எனும் நிறுவனம் சமீபத்தில் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் சில கருத்துக் கணிப்புகளை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில்," பாகிஸ்தானுக்கு, அமெரிக்காவால்தான் பெரும் ஆபத்து' என 59 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். "இந்தியாவால் ஆபத்து' என்று 18 சதவீதம் பேரும், 11 சதவீதம் பேர் ," தலிபான்களால் ஆபத்து' என்றும் கூறியுள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பில், அமெரிக்கா தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, பாகிஸ்தான் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளதாக அல் ஜசீரா கூறியுள்ளது. தலிபான்களை அடக்குவதற்கு ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராணுவ நடவடிக்கைகளுக்கு 24 சதவீதம் பேர் எதிர்ப்பும், 22 சதவீதம் பேர் நடுநிலையை தெரிவித்துள்ளனர். மற்றொரு கருத்துக் கணிப்பில், தலிபான்களைக் கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கையே சரி என்று 41 சதவீதம் பேரும், பேச்சு வார்த்தை தீர்வே சரி என 43 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com