Saturday, August 1, 2009

பொட்டு, சூசை தப்பித்து விட்டதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளரான பொட்டு, கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோர் தப்பித்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

புலிகளின் முக்கியஸ்தர்களான மேற்படி இருவரும் ஒருவாறு தப்பித்துவிட்டதாக இராணுவப் புலனாய்வுத்துறை அரசிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக இணைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அவ் இணையம் தொடர்ச்சியாக இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதே நேரம் புலிகள் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுவரும் கே.பி எனப்படும் செல்வராசா பத்தமநாதன், புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு, கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசை உட்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com