Sunday, August 16, 2009

உக்கிய நிலையில் இரு உடல்கள் சப்புஸ்கந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 , 35 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களது உடல்கள் சப்புக்கஸ்கந்த ஒதுக்குப்புறப் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழுதடைந்து காணப்படும் இவ் உடலங்களில் ஒரு பகுதி மிருகங்களாலும் பூச்சி புளுக்களாலும் உண்ணப்பட்டுள்ளதாகவும் சுமார் நான்கு நாட்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டு அவ்விடத்திற்கு இவ்வுடல்கள் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் பாதாளக்குழக்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையின் அணியொன்று செயற்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான உடலங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com