Saturday, August 29, 2009

அக்கரைபற்றில் துப்பாக்கிச் சூடு இளைஞர் ஒருவர் படுகாயம்.

அக்கரைபற்றுப் பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அக்கரைப்பற்று ஆர்.டி.ஏ வீதியைச் சேர்ந்த சுரேஸ்குமார் வயது 31 என்பவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இரு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுவரும் போட்டா போட்டிகளின் பிரதிபலனாகவே குறிப்பிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.

காயமடைந்த நபர் அக்கரைப்பற்று எழுவட்டுவான் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com