Thursday, August 20, 2009

துஸ்பியோகம் ஒன்றை விசாரணை செய்யச் சென்ற பொலிஸார் பாலியல்துஸ்பிரயோகம்.

11 வயது சிறுமி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோகம் ஒன்று தொடர்பான விசாரணை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ்காரர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று பொல்பிட்டிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்வத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மேற்படி பிரதேசத்தில் உள்ள சிறுமி ஒருவர் 53 வயதுடைய நபர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக இம்மாதம் 10ம் திகதி பொல்பிட்டிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 12ம் திகதி இரு பொலிஸ் அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இரு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பெற்றோரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களது வாய்முறைப்பாட்டை பதிவு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது 11 வயது சிறுமியை விசாரணைசெய்த அடுத்த பொலிஸ்காரர் சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆட்கள் இல்லாத குறிப்பிட்ட வீட்டை காட்டுமாறு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறு சென்ற பொலிஸ் காரரும் சிறுமியும் குறிப்பிடத்தக்களவு நேரமாகியும் திருப்பி வராததையடுத்து அங்கு விரைந்த பெற்றோர் பொலிஸ்காரர் தமது 11 மகளை கட்டியணைத்து சில்மிசம் புரிவதை கண்டுள்ளனர். சம்பவத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர் இரு பொலிஸாரையும் தாறுமாறாக பேசிக்கலைத்துள்ளனர்.

மறுநாள் பொலிஸாரின் இச்செயல் தொடர்பாக மஹவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹப்புஅராச்சியிடம் பெற்றோர் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த பொலிஸாகாரர் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com