Wednesday, August 26, 2009

சனல்4 வின் அதிர்சி வீடியோ : இலங்கை அரசு மறுப்பு

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் பெரும் மனிதப்பேரவலம் இடம்பெற்றுள்ளதாக தொடர்ச்சியா இலங்கை அரசைக் குற்றஞ்சாட்டிவரும் இலண்டன் சனல்4 தொலைக்காட்சி வன்னியில் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோ பதிவு ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பினர் தமக்கு வழங்கியதாகவும், அவ்வீடியோ கடந்த ஜனவரி மாதம் களமுனையில் நின்ற சிப்பாய் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் அக்காட்சியை பதிவு செய்திருந்தாகவும் கூறப்படுகின்றது.

இச்சர்சைக்குரிய விடயத்தை பூரணமாக நிராகரித்திருக்கும் இலங்கை அரசு தமது படைகள் வன்னியில் புலிகளுக்கு எதிராகவே போராடியதாகவும் மக்களுக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளிலும் இறங்கியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com