Friday, August 28, 2009

மேலும் 3 பாதளங்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மத்திய கொழும்பு பிரதேசத்தின் பிரபலம்வாய்ந்த பாதளஉலக கோஷ்டியின் தலைவன் பாஜி மற்றும் அவரது சகாக்களான ரொஜி, சாதிக் ஆகியோர் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை மாளிகாவத்தை ஜூம்மா வீதியில் உள்ள இவரது வீட்டை சுற்றி வளைத்த விசேட அதிரடிப் படையினர் அவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பாஜி பிரதேசத்தின் முடிசூடா மன்னனாகவும் நீதிபதியாகவும் செயற்பட்டுவந்தாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டில் சிறிய நீதிமன்று ஒன்றை வைத்து அப்பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளுக்கு நீதிபதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

பிரதேசத்தில் சச்சரவுகள் இடம்பெறுகின்றபோது அங்குள்ள மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதிலும் பார்க்க இவரது நீதிமன்றிற்கே சென்று வந்துள்ளனர். பிரதேசத்தில் சுயமாக சட்டம் ஒன்றை இயற்றி செயற்படுத்தி வந்த இவர் அங்குள்ள சகல வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களிடம் மாதாந்தம் கப்பம் வாங்கி வந்ததாக கூறப்படுகின்றது. இவருக்கு கப்பம் கொடுக்க மறுத்த பலர் தமது வீடுகளை விட்டுவிட்டு ஓடி பல இடங்களில் தலைமறைவாக வாழந்து வருவாகவும் தெரியவந்துள்ளது.

1 comments :

Unknown August 28, 2009 at 4:20 PM  

dear sri this story is true becouse in 2003 he is try to kill me with potta naufer now he is in jail but in side from jail naufar call to him to do is all work i left from srilanka 2003 still i cant go to see my faily last 6 half year still there are do illigle business gold seal cigirate drugs and somany things. can tell my name becouse still potta naufer wait to kill me he is only main person when he is get hang than only i can come to sri lanka

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com