Thursday, August 6, 2009

வவுனியா கூமாங்குளத்திலிருந்து 366 கிலோ வெடிமருந்துகள் மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 366 கிலோ எடையுள்ள சி – 4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகளை விசேட பொலிஸ் குழு கைப்பற்றியுள்ளது.

நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவில் வைத்து கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பெருந்தொகையான வெடிமருந்துகள் மீட் டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்து வவுனியா நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவிலிருந்து 35 வயதுடைய விஜயன் என்று அழைக்கப்படும் கந்தைய்யா விஜயகுமார் என்பவரை கைது செய்த பொலிஸார் கடுமையான விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இந்த விசாரணையின் போது அவர் வழங்கிய தகவலின் படி கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட் டிருந்த 366 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகளையும் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த நபர் வழங்கிய தகவல்களின் படி பூந்தோட்டம் பிரதேசத்திலிருந்து 24 வயதுடைய கரன் என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சிவகரன் என்பவரையும் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com