Thursday, July 30, 2009

மதகுருவுக்கும் அவருடைய தந்தைக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி ஜந்து நபர்களிடம் ஆறு லட்சம் ரூபா பணத்தை பெற்று தலைமறைவாகியிருந்த மதகுரு ஒருவருக்கும் அவருடைய தந்தைக்கும் கல்கிஸ்ஸ பிரதம நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார். தெகிவளை மதவழிபாட்டுதலம் ஒன்றில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குறிப்பிட்ட மதகுருவான ஜிகும் மடுவகே விமலவுட்டி என்பவர் நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது மகனான மதகுரு பெற்றுக்கொண்ட தொகையை திருப்பி கொடுப்பதாக அவருடைய தந்தையான ஜினடாச என்பவர் வாக்குறுதியளித்ததற்கு இணங்க நீதிமன்றம் அவரை சரீரப் பிணையில் விடுதலை செய்திருந்தது.

ஆனால் தற்போது குறிப்பிட்ட மதகுருவும் அவருடைய தந்தையும் அப்பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளதால் கல்கிஸ்ஸை பிரதம நீதவான் இருவருக்கும் பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com