Tuesday, July 21, 2009

வவுனியா உள்ளுராட்சி மன்றைக் கைப்பற்றுவோம். மக்கள் மனங்களில் பெருமாற்றம். சித்தார்த்தன்.

எதிர்வரும் வவுனியா உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்று மன்றைக் கைப்பற்றும் என உறுதியாக நம்புவதாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இடம்பெற இருக்கின்ற தேர்தலில், மக்கள் ஆர்வம் தொடர்பாக அவரிடம் வினவியபோது, இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களின் உறவுகள் வன்னயில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா இடைத்ததங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். எனவே வவுனியா மக்கள் தமது உறவுகளுக்கு தேவையான உதவிகளைச் செய்வதிலும் அவர்கள் வெளியே கொண்டுவருவதிலும் தமது முழுநேரத்தையும் செலவிட்டு மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதைக் காண முடிகின்றது. இருந்தபோதிலும் மக்கள் தேர்தலில் ஆர்வமாக உள்ளார்கள் என்றே கூறுவேன். மக்கள் தாமாகவே வந்து எமக்கு தமது ஆதரவைச் தெரிவித்துச் செல்கின்றனர் என்றார்.

வவுனியா மக்களின் மனநிலை எவ்வாறு காணப்படுகின்றது எனக் கேட்டபோது, நான் புலிகளின் தலைமை முற்றாக ஒழிக்கப்பட முன்பும் அடிக்கடி இங்கு வந்துசெல்வதுண்டு. அனால் மே 17ம் திகதிக்கு முன்னர் மக்களின் மனநிலையிலும் தற்போதும் காணப்படும் மாற்றம் யாதெனில், மக்கள் இப்போது மாற்றுக் கட்சிகள் சகலவற்றுடனும் உரிமையுடன் பழக வேண்டும் எனும் தமது ஆர்வத்தை காட்டுகின்றார்கள். முன்பு மாற்றுக் கட்சிகளுடன் பழகுவதற்கு மக்களுக்கு புலிகளால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவர்கள் அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பழக ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com