Sunday, July 19, 2009

நஸ்டஈடு கோரிச் சென்ற இராணுவ வீரனின் மனைவி பொலிஸாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்.

வவுனியா இராணுவ முகாம் ஒன்றில் கடமைபுரியும் இராணுவ வீரனது மனைவியான திருமதி. ஜெயவர்த்தன பொலிஸாரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது,

தெற்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அந்நெடுஞ்சாலைக்காக தெரு ஓரங்களில் இருந்த பல வீடுகள் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான நஸ்டஈடு வழங்கப்படும் எனவும் பெருந்தெருக்கள் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பலாங்கொட வீதி அல்பிட்டி எனுமிடத்தில் மேற்படி இராணுவ வீரனின் வீடு அமைந்திருந்துள்ளது. அவ்வீடு பெருந்தெருக்கள் திணைக்களத்தினால் இடித்து நீர்மூலமாக்கப்பட்டுள்ளதை அடுத்து இராணுவ வீரனின் மனைவி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட நஸ்ட ஈடு கோரி அமைச்சிற்கு சென்றுள்ளார்.

பல முறைகள் அவர் அங்கு சென்றபோதும் அவரக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அரசிடம் நிதி இல்லை எனக் கூறப்பட்டதை தொடர்ந்து இராணுவ வீரரின் மனைவி தனது நஸ்ட ஈடு கிடைக்கப்பெறும்வரை அமைச்சின் அலுவலகத்தில் இருந்து வெளியேறப்போதில்லை எனக்கூறி அங்குள்ள ஆசனம் ஒன்றில் அமர்ந்தவாறு அங்கேயே இருந்துள்ளார்.

பொலிஸாருக்கு இவ்விடயத்தை அமைச்சின் அதிகாரிகள் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த இரு பெண் பொலிஸார் இராணுவ வீரனின் மனைவியை தாறுமாக தாக்கியதாகவும் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து தலங்கம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com