Sunday, July 26, 2009

இலங்கை-இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சர்களின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் மகாநாடடில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன்னர் இடம்பெற்ற பிராந்திய மாநாடுகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பாக ஆராயப்பட்டாலும் உள்நாட்டுயுத்தம் காரணமாக அச்சேவைக்கு இணக்கம்காணப்படவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்த நிலையில் கொழும்பிலிருந்து கொச்சினுக்கு பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பதற்கு இந்தியா பூரண இணக்கம் தெரிவித்ததுடன் இப்பயணிகள் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com