Wednesday, July 15, 2009

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கு தேவையான 60% நிதியை அரசு பெற்றுக்கொண்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கு தேவையான 60% நிதியை இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு தேவைப்படும் 155 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 60% கிடைக்கப்பெற்றுள்ளது. இப்பணத்தை எமக்கு வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் மிகவும் பொறுப்புணர்சியுடனும், பற்றுடனும் செயற்பட்டிருக்கின்றன என மேலும் கூறிய அவர், இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு அரசு மிகவும் கடின உழைப்பை மேற்கொண்டு வருதவதாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com