Thursday, July 16, 2009

இடைத்தங்கல் முகாம் மக்களின் நிவாரணத்திற்காக லண்டன் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகின்றது.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் அபிவிருத்தி மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பிரித்தானியா 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவுள்ளதாக பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் அறிவித்துள்ளது.

அத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இடைத்தங்கல் முகாம்களின் தரம் முன்னேறிவருகின்றது. ஆனால் அடிப்படையானவை. அங்கு சனநெருக்கடியும் போசாக்கின்னையும் காணப்படுகின்றது. இப்பணம் இப்பிரச்சினைகளுக்கு உதவும். ஆத்துடன், இப்பணம் அங்குள்ள மக்கள் தமக்கு தேவையானவற்றை வாங்குவதற்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com